top of page

தமிழ் ஹெல்த் டிப்ஸ்

ree

இலையை அரையல் செய்து உண்பதால் பயன் பெறலாம்.


செவ்வரத்தம்பூவைப் பச்சடி செய்து உண்டு வந்தால் சலக்கடுப்பு, கால்வீக்கம் என்பன நீங்கும். உடற்சூடு தணியும்.


இதரை வாழைப்பூவைக் கறி சமைத்து உண்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். குழந்தை இல்லாத பெண்கள் தமது உணவில் இதனைச் சேர்த்து வரலாம்.


குழந்தையில்லாத தம்பதியர் செவ்வாழைப்பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு ஏற்படவாய்ப்புண்டு.


அத்திப்பிஞ்சை குழம்பாகச் சமைத்து உண்டு வந்தாலும் பெண்கள் பொரும்பாட்டு நோய் நீங்கும்.


பொன்னாங்காணியை நெய்யில் வதக்கிக் கறி சமைத்து உண்டு வந்தால் கண்பார்வை தெளிவுறும். உடல் பலம் பெறும்.


மஞ்சள் கரிசலாங்காணிக் கீரையை கறி சமைத்து உண்டுவந்தால் பித்த சம்பந்தமான நோய் நீங்கும்.


வேப்பம்பூ பச்சடியாக, வடகமாக உண்டு வந்தால் இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

 
 
 

Comments


1StopView-Logo_v3-rgb.jpg
bottom of page