ஆயில் புல்லிங் செய்வது பற்றிய அறிவியல் உண்மைகள் என்ன?
பல், வாய் சம்பந்தமான கோளாறுகள், கண், காது பிரச்சினைகள், வயிறு உபாதைகள், மலச்சிக்கல், ஒற்றைத் தலைவலி, உடல் சோர்வு, மூட்டுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சிறுநீரகப் பிரச்சினைகள், உறக்கமின்மை போன்ற அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும் சிறந்த நிவாரணியாக ஆயில் புல்லிங் செயல்படுகிறது.
அழகாகவும் இருக்கணும், ஆரோக்கியமாகவும் இருக்கணும், என்ன செய்யலாம் என்று கேட்பவர்களுக்கு மருத்துவர்களும் பெஸ்ட் சாய்ஸ் ஆயில் புல்லிங் தான் என்கிறார்கள்.
வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுதோ இல்லையோ வாய் நிறைய நல்லெண்ணெயை ஊற்றி நல்லா கொப்பளிச்சா இருக்கிற எல்லா நோயும் பறந்து போயிடும்னு நம்ம முன்னோர்கள் சொல்கிறார்கள்.
சமீப வருடங்களாக ஆயில் புல்லிங் செய்வது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது.
ஆயில் புல்லிங் நன்மைகள்:
வாய்ப்புண், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல் போன்றவற்றுக்கு உப்பு நீரில் வாய் கொப்பளிக்க சொல்வார்கள்.ஆனால், ஆயில் புல்லிங் செய்தால் பற்களில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறுவதோடு வாய் துர்நாற்றம் பிரச்சினைகளும் நீங்கி விடும்.
பற்களில் உள்ள மஞ்சள் நிற கறையை நீக்கி வெண்மையை உண்டாக்கும். அதிக இனிப்புகளால் உண்டாகும் சொத்தைப் பிரச்சினையையும் தவிடு பொடி ஆகும்.
ஆயில் புல்லிங் செய்யும் போது கன்னக்குழிகளுக்கு சிறந்த பயிற்சியாகி சருமத்தை பொலிவு பெறச் செய்கிறது.
வறண்ட சருமத்தை பாதுகாக்கிறது.
ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
சுருங்கச் சொன்னால் ஆரோக்கிய குறைபாடான வாழ்க்கை முறையை ஆரோக்கிய மிகுதியான வாழ்க்கையாக மாற்றுகிறது.
![](https://static.wixstatic.com/media/79b069_0e28cd722f28461ea8596aca0208ff0b~mv2.jpg/v1/fill/w_980,h_454,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/79b069_0e28cd722f28461ea8596aca0208ff0b~mv2.jpg)
எவ்வளவு நாட்கள் செய்யலாம்:
இதை எப்போதும் அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கி விட்டு செய்வது நலம் பயக்கும்.குறைந்தது 15–20 நிமிடங்கள் வரை வாயின் பற்களுக்கிடையில் புகுந்து வருமாறு எண்ணெயை ஊற்றி கொப்பளிக்க வேண்டும்.. நேரம் ஆக ஆக எண்ணெய் வெண்மை நிறம் பெறும்.அதுவே சரியான கொப்பளிக்கும் முறை.
உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்ற தொடர்ந்து 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை செய்வது நல்லது. ஆறு மாதங்கள் ஆனதும் உடலில் அழகும் ஆரோக்கியமும் மெருகேறுவதைக் கண்கூடாகக் காணலாம்.
ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமித்தொற்று நோய்களிலிருந்து முதலில் விடுதலை பெறலாம்.கண், காது, மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது..
நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய்கள் , பார்க்கின்சன், கல்லீரல் நோய், ரத்தப் புற்று ( அல்லது) எலும்பு மஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப் பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக் கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்….
நோயின் தன்மைக்கேற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம் குறையும்…
இதனை அப்போதைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்து காட்டியுள்ளார்.
நன்றி 🙏 கூகுள் மற்றும் Tamil Society of Health Care Professional— Ampara District., Facebook.
Thanks to Sources.
சு.மா.கா.சுந்தர்ராஜ் காமாட்சி
Comments